ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு 5000 வழங்கிய வர்த்தகர் கைது

Date:

மூதூர் பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை விளம்பரப்படுத்துவதற்காக அருகில் வசிப்பவர்களுக்கு தலா 5000 ரூபாவை விநியோகித்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து பெரிய முல்லை பாலத்திற்கு அருகில் உள்ள நபரொருவரின் வீட்டில் சந்தேக நபர் பணம் விநியோகித்ததாக மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஜனாதிபதி வேட்பாளரை விளம்பரப்படுத்துவதற்காக அருகில் வசிக்கும் மக்களுக்கு தலா 5000 ரூபாவை விநியோகித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...