கியூப ஜனாதிபதியை ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார்

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூப ஜனாதிபதி Miguel Díaz-Canel-ஐ சந்தித்துள்ளார்.

இதன்போது, கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

G77 சீன அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கியூபா சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அந்நாட்டு ஜனாதிபதி Miguel Díaz-Canel வரவேற்றார்.

கியூபாவுக்கு எதிரான தடைகளை நீக்குமாறு கோரும் ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதரவளித்து வருவதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் சுகாதாரம், விவசாயம் , விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பிலும் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

அடுத்த வருடத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூப ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, G77 அரச தலைவர்களின் மாநாடு கியூபாவின் ஹவானா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...