சதொச நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாய பணி நீக்கம்

Date:

சதொச நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கட்டாய பணி நீக்கம் செய்ய அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக சதொச பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி சதொசவில் பணியாற்றிய 292 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ள நிலையில், குறித்த முடிவுக்கு ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிய வருகையில், சதொச மறுசீரமைப்பின் கீழ் இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் 300 ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுப்பதற்கு சதொச பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அமைச்சரவையில் சமர்ப்பித்த பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதால் சதொச நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த கட்டாய ஓய்வு பிரேரணையின் பிரகாரம் ஊழியர்களுக்கு செப்டெம்பர் மாதம் சம்பளம் வழங்கியதன் பின்னர், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் மாதாந்த சம்பளம் அல்லது வேறு கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சதொச ஊழியர்கள் அடுத்த வாரம் முதல் தொழில் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...