வன்முறை இன்றி வெற்றியை கொண்டாடுமாறு அநுர அறிவிப்பு

0
177

எமது நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரம் தேவை எனவும், வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பஞ்சிகாவத்தை சைக்கோஜி பாலர் பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்து பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்தத் தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் தேர்தலாக இருக்கும். அரசுகளை கவிழ்க்க, ஆட்சி அமைக்க, ஆட்சியை மாற்ற, தலைவர்களை மாற்ற நீண்ட காலமாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் இலங்கை வரலாற்றில் மிக வலுவான திருப்புமுனை என்று நான் நினைக்கிறேன். மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்.

மேலும், வெற்றிக்குப் பிறகு, அனைவரும் அமைதியாக இருப்பார்கள், ஜனநாயகத்தின் சிறப்பியல்பு என்னவென்றால், எந்தவொரு நபரும் தனக்கு விருப்பமான அரசியல் இயக்கத்தில் பணியாற்றுவதற்கும், அவர் விரும்பிய அரசியல் இயக்கத்திற்கு தனது வாக்கைப் பயன்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.

எனவே, வெற்றிக்குப் பிறகு வன்முறையோ, மோதலோ இருக்கக் கூடாது. நமது நாட்டுக்கு புதிய அரசியல் கலாச்சாரம் தேவை. ஜனநாயக ரீதியில் அனைவரது கருத்துக்களும் மதிக்கப்படும், துன்புறுத்தலுக்கு ஆளாகக் கூடாது.

எனவே, தேர்தல் வெற்றியை வன்முறையின்றி, மோதல் சூழ்நிலையின்றி மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை, ஆணைப்படி தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதிக்கு தற்போதைய ஜனாதிபதி அமைதியான முறையில் அதிகாரத்தை வழங்குவார் என தாம் நம்பவில்லை எனவும் அனுர திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here