திலீபன் நினைவேந்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Date:

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்குமாறு யாழ். பொலிஸாரால் இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மீண்டும் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

திலீபன் நினைவேந்தல் வன்முறையாக மாற்றமடைவதால், நினைவு தின நிகழ்வுகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டுமென யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்றில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த மனு தொடர்பிலான விசாரணைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் ஆஜராகியிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ். நீதவான் A.A.ஆனந்தராஜா நினைவு தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை யாழ். நீதவான் நீதிமன்றம் இதற்கு முன்னரும் தள்ளுபடி செய்திருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...