திலீபன் நினைவேந்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Date:

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்குமாறு யாழ். பொலிஸாரால் இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மீண்டும் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

திலீபன் நினைவேந்தல் வன்முறையாக மாற்றமடைவதால், நினைவு தின நிகழ்வுகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டுமென யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்றில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த மனு தொடர்பிலான விசாரணைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் ஆஜராகியிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ். நீதவான் A.A.ஆனந்தராஜா நினைவு தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை யாழ். நீதவான் நீதிமன்றம் இதற்கு முன்னரும் தள்ளுபடி செய்திருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...