அலி சப்ரி ரஹீமிற்கு பாராளுமன்றத்தில் தற்காலிகமாக விதிக்கபட்ட தடை

Date:

பாராளுமன்ற குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு தற்காலிகத் தடை விதிக்கும் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக பாராளுமன்ற ஒழுக்கக்குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்ததுடன், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல அதனை வழிமொழிந்தார்.

சட்டவிரோதமான முறையில் 74 மில்லியன் ரூபா பெறுமதியான 3.3 கிலோ கிராம் தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த போது, சுங்கப் பிரிவினரால் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு விதிக்கப்பட்ட அபராதம் மிகக்குறைவானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...