விரைவில் பொதுத் தேர்தல்! மொட்டுக் கட்சி கடும் எதிர்ப்பு

Date:

2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குப் பின்னர் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க அரசியலமைப்பு ரீதியாக அதிகாரம் உள்ளது.

நிலைமையைக் கருத்தில் கொண்டு தேர்தலுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சற்றும் உடன்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமது பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதவிக் காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்கக் கூடாது என்பதே பாராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...