இன்னும் 10 கையொப்பம் கிடைத்தால் பாராளுமன்றம் கலைக்கப்படும்

Date:

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஏலத்தில் அமைச்சர்களை நியமித்துள்ள அரசாங்கத்திற்கோ மக்கள் இறைமை கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கூறுகிறார்.

குறைந்த பட்சம் மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு மக்கள் அதிகாரம் இறைமை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக, உண்மையான மக்கள் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கமும் பாராளுமன்றமும் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக கூடிய விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் மரிக்கார் கூறினார்.

பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் எதிர்க்கட்சி பெரும்பான்மை பலத்தை பெற வேண்டும் எனவும், அதற்கமைவாக மேலும் 10 ஆசனங்களை மாற்றினால் ஜனாதிபதி விரும்பியோ விரும்பாமல் பாராளுமன்றத்தை கலைக்க நேரிடும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய கட்சிகள் மற்றும் பொதுஜன பெரமுனவில் இருந்து எதிரணிக்கு வந்த குழுக்கள் உள்ளிட்ட 103 ஆசனங்கள் தற்போது எதிரணியிடம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தை ஆதரிக்கும் 10 எம்.பி.க்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்தால் தானாக பாராளுமன்றம் கலைக்கப்படும் என மரிக்கார் கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் தென்மேற்குப் பருவமழை

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை மீண்டும் நிலைபெற்றுள்ளதால் மேல், சப்ரகமுவ, வடமேல்...

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் கைது

இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான...

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...