எயார்லைன்ஸ் விமானங்களின் தாமதத்தினால் 195 கோடி ரூபா நட்டம்

Date:

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்ற ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களின் தாமதத்தினால் 195 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே, ஊழியர்களுக்கு எந்த ஊதியத்தையும் அதிகரிக்க முடியாது என்று அமைச்சர் கூறுகிறார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடனாக உள்ளதாகவும், அதற்கான வட்டியை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

விமான சேவையின் உற்பத்தித்திறனை அதிகரிக்குமாயின் உற்பத்தித்திறன் அடிப்படையில் சில கொடுப்பனவுகளை வழங்க முடியும் என அவர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தொடர்ச்சியான தாமதத்தினால் விமானப் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விமான சேவை முகாமைத்துவம் மற்றும் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (2) அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...