பொலிஸ் மா அதிபர் வரும் திங்களுடன் வீடு செல்கிறார்

Date:

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஒக்டோபர் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஓய்வுபெறவிருந்த அவரது சேவையை இரண்டு தடவைகள் தலா மூன்று மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்திருந்தார்.

இதனால், கடந்த ஜூலை 9ஆம் திகதி முதல் வழங்கப்பட்ட மூன்று மாத சேவை நீட்டிப்பு வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ளது.

எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க ஆகியோர் அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...