இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் இந்த பரிசினை பெற உள்ளனர்.