தொடரும் பணிப்புறக்கணிப்பு; அலுவலக ரயில் சேவையில் தாமதம்

Date:

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் குழுவால் தொடங்கப்பட்ட பணி புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.

மாளிகாவத்தை புகையிரத வீதியின் நுழைவாயிலில் வைத்து புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (04) முதல் பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி நேற்று சுமார் 78 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

எவ்வாறாயினும், நேற்று தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு அதிகாரியை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்திருந்தது.

ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட ஏனைய நபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ரயில்வே பிரதி கட்டுப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...