ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (05) மாலை 4.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டியில் பல பிரதேசங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.