ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நசீர் விரட்டியடிக்கப்பட்டது சரியே – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

Date:

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இது உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் மனு ஆராயப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றுக்கு தெரிவான நசீர் அஹமட் 21வது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவு அளித்து கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டார்.

இதனை அடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த முஸ்லிம் காங்கிரஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இதனை சவாலுக்கு உட்படுத்தி அஹமட் நசீர் வழக்கு தாக்கல் செய்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அஹமட் நசீரை கட்சியில் இருந்து நீக்கியமை சட்டபூர்வமானதே என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...