வன்னி, நுவரெலியா யானை – ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னம்

Date:

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி பிரதானமாக எரிவாயு சிலிண்டர் சின்னத்திலும் பல மாவட்டங்களில் யானைச் சின்னத்திலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

“தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமைப்பினர் பெருமளவிலான அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதுடன், வேட்புமனுச் சபைகள் கூடிவருகின்றன. இந்த வார மத்தியில் அனைத்து பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் எரிவாயு சின்னத்தில் போட்டியிடவும், வன்னி பிரதேசம் யானை சின்னத்தில் போட்டியிடவும், நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடவும் இறுதி ஒப்பந்தம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அது முடியப் போகிறது.”

காலியில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...