வன்னி, நுவரெலியா யானை – ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னம்

Date:

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி பிரதானமாக எரிவாயு சிலிண்டர் சின்னத்திலும் பல மாவட்டங்களில் யானைச் சின்னத்திலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

“தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமைப்பினர் பெருமளவிலான அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதுடன், வேட்புமனுச் சபைகள் கூடிவருகின்றன. இந்த வார மத்தியில் அனைத்து பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் எரிவாயு சின்னத்தில் போட்டியிடவும், வன்னி பிரதேசம் யானை சின்னத்தில் போட்டியிடவும், நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடவும் இறுதி ஒப்பந்தம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அது முடியப் போகிறது.”

காலியில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...