நாட்டின் அந்நியச் செலாவணி அதிகரிப்பு

Date:

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் 3,863 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை அவர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2,215 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இந்த தொகை 74.4 வீதமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம், தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் 499 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...