ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார் – தம்மிக்க பெரேரா அதிரடி அறிவிப்பு

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக நிற்கத் தயார் எனவும், மொத்த வாக்குகளில் 51 வீதமான வாக்குகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரமே அதனைச் செய்வேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

“தேசய” நாளிதழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தம்முடைய வேட்புமனுவை பெரும்பான்மைக் கட்சிகள் ஏற்றுக்கொண்டால் அது தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கமாக அமையும் எனவும் தம்மிக்க பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சி களமிறங்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது தாம் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...