ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார் – தம்மிக்க பெரேரா அதிரடி அறிவிப்பு

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக நிற்கத் தயார் எனவும், மொத்த வாக்குகளில் 51 வீதமான வாக்குகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரமே அதனைச் செய்வேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

“தேசய” நாளிதழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தம்முடைய வேட்புமனுவை பெரும்பான்மைக் கட்சிகள் ஏற்றுக்கொண்டால் அது தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கமாக அமையும் எனவும் தம்மிக்க பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சி களமிறங்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது தாம் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...