கேக்குகளில் வெண்ணெய் முட்டை, மார்ஜரின் இல்லை

Date:

கேக்கில் உள்ள பொருட்களைப் பரிசோதிக்க இலங்கையில் இன்னும் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், இதனால் லேபிள்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானவை என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் முட்டை அல்லது வெண்ணெய் அல்லது மார்ஜரின் போன்றவற்றை கம்பனி கேக் உற்பத்திக்கு பயன்படுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, தயாரிப்புகளில் பெரும்பாலும் வெண்ணெய் சுவை மற்றும் செயற்கை முட்டை சுவை உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குறிப்பிட்டார். மேலும் சந்தையில் இருந்து கொள்வனவு செய்யப்படும் கேக்குகள் முட்டை அல்லது வெண்ணெய் அல்லது மார்ஜரின் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்பதை நுகர்வோர் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான முறைகேடுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்காக 44 வருடங்களுக்கு முன்னர் 1980 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் ஏற்பாடுகள் உரிய முறையில் தண்டனை வழங்குவதற்கு இதுவரை தயாராகவில்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...