நாட்டில் கூட்டுக் களவாணிகள் குறித்து சஜித் பிரேமதாச கருத்து

0
59

நாட்டைத் தனித்தனியாக கொள்ளையடித்தவர்கள் இன்று ஒன்றுசேர்ந்து திருட ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இந்நாட்டை அழித்து மக்களின் வாழ்க்கையை அசௌகரியத்திற்கு மேல் அசௌகரித்திற்குட்படுத்திய கும்பலை இந்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மஹியங்கனை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மஹியங்கனை தேர்தல் தொகுதி அமைப்பாளர் லக்‌ஷமன் செனவிரத்ன இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here