பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீரென வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (10) அதிகாலை 04.00 மணியளவில் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல நூறு கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஞானசார தேரரின் பெயரும் கூறப்பட்டதையடுத்து, அவரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், கடந்த காலத்தில் ஞானசார தேரர் காட்டிய துணிச்சலின்படி, சிஐடிக்கு பயந்து நாட்டை விட்டு ஓடியிருக்க முடியாது.
தேசத்திற்கு ஏதேனும் அளப்பரிய சேவையை செய்வதற்கு நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும்…