களனி கங்கையை சுற்றி வெள்ள அபாய எச்சரிக்கை

Date:

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ் நிலப் பகுதிகள் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது பள்ளத்தாக்கின் மேல் மற்றும் நடுத்தர பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியினாலாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சிதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்பிலான எச்சரிக்கை அமுலில் உள்ளது.

இப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...