இஸ்ரேலுக்கு அனுமதியின்றி நுழைந்த இலங்கையர் சுட்டுக்கொலை

Date:

சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மனித கடத்தல்காரர்களிடம் 40 இலட்சம் ரூபாவை செலுத்தி இஸ்ரேலுக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபருக்கு இஸ்ரேலில் தங்குவதற்கு வீசா இல்லாத காரணத்தினால் அவர் காயமடைந்த போதிலும், அனுமதியின்றி நாட்டிற்குள் பிரவேசித்து வசிப்பதனால் எவ்வித சட்டரீதியான உரிமைகளையும் பெறுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜோர்தான் எல்லை வழியாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரண்டு இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளமையையும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் யார் என்ற தகவலை வெளியிட நாளைய தினம் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...