தபால் மூல வாக்குச் சீட்டுகள் 23ம் திகதி தபால் நிலையங்களுக்கு

Date:

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி தபால் நிலையத்தில் கையளிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மாவட்டச் செயலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல்துறையினருக்கான தபால் மூல வாக்குகள் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் குறிக்கப்பட உள்ளன.

ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத் தளங்களில் தபால் மூல வாக்குச் சீட்டுகள் குறிக்கும் நடவடிக்கைகள் நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்களில் தபால் மூல வாக்குகளை பயன்படுத்த முடியாதவர்கள் நவம்பர் 7 மற்றும் 8ம் திகதிகளில் தபால் மூல வாக்கினை அளிக்கலாம்.

அவர்கள் பணிபுரியும் இடம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்கலாம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...