இஸ்ரேலில் காணாமல் போன இலங்கை பெண் மரணம்! இருவர் தொடர்ந்து மாயம்

Date:

காணாமல் போனதாக முன்னர் கூறப்பட்ட இலங்கைப் பிரஜை அனுலா ஜயதிலக்கவின் மரணத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

தூதுவர் பண்டாரவின் கூற்றுப்படி, அடுத்த இரண்டு நாட்களுக்குள் சடலம் அவர்களால் பெற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, சடலம் சுமூகமாக சொந்த நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான வன்முறை மோதல்களை அடுத்து காணாமல் போன இரண்டு இலங்கையர்களின் இருப்பிடத்தை தூதரகம் இன்னும் கண்டறியவில்லை.

இஸ்ரேலின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என தூதுவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்...

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா...

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...