இஸ்ரேலில் காணாமல் போன இலங்கை பெண் மரணம்! இருவர் தொடர்ந்து மாயம்

0
68

காணாமல் போனதாக முன்னர் கூறப்பட்ட இலங்கைப் பிரஜை அனுலா ஜயதிலக்கவின் மரணத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

தூதுவர் பண்டாரவின் கூற்றுப்படி, அடுத்த இரண்டு நாட்களுக்குள் சடலம் அவர்களால் பெற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, சடலம் சுமூகமாக சொந்த நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான வன்முறை மோதல்களை அடுத்து காணாமல் போன இரண்டு இலங்கையர்களின் இருப்பிடத்தை தூதரகம் இன்னும் கண்டறியவில்லை.

இஸ்ரேலின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என தூதுவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here