விரைவில் ஜனாதிபதித் தேர்தல்

Date:

2023ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக முன்னர் செய்தியொன்றில் தெரிவித்திருந்தோம்.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள அரசியலமைப்பு விதிகளின்படி, 2023 நவம்பர் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை, ஆனால் தேவையான அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், எனவே அவர்கள் இதை எதிர்க்க மாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்கு தணித்து தேர்தலை நடத்தக்கூடிய சூழலை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...