ஜனாதிபதி தேர்தலில் வடக்கிலிருந்து தனி வேட்பாளர்?

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை முன் நிறுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய அரசியல் தலையீடுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் வேட்பாளர்களான சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கையின் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்காதிருக்க வடக்கின் அரசியல் தலைவர்கள் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டால், ஏழு தென் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களின் நிலை எப்படி அமையும் என்ற சந்தேகம் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

இந்த மாற்றங்களின்படி, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தலாக அடுத்த ஜனாதிபதி தேர்தல் அமையும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கம், பாராளுமன்ற தேர்தல் முறை மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (18) பாராளுமன்றத்தில் கட்சி தலைவர்களின் கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...