இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; ஹமாஸின் மூத்த தலைவர் பலி

Date:

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த தலைவர் ஜெஹாத் மெய்சன் கொல்லப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனத்தில் காஸா உட்பட சில பகுதிகளில் செயல்பட்டுவரும் ஹமாஸ் தலைமையிலான தேசிய பாதுகாப்புப் படை இயங்கிவருகிறது. இதன் மூத்த தலைவராக ஜெஹாத் மெய்சன் செயல்பட்டுவந்தார்.

இந்நிலையில், இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஜெஹாத் மெய்சன் அவரது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் கொல்லப்பட்டுள்ளார்.

காஸாவின் ஷேக் ரத்வான் சுற்றுப்புறத்தில் நடந்த தாக்குதலிலேயே இவர் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் – பலஸ்தீன போர் 13ஆவது நாளை எட்டியுள்ளது. போரால் காஸாவில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் இதுவரை இடம்பெயர்ந்துள்ளனர்.

இது காஸாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியாகும். இரு தரப்பிலும் 5,000 பேர் வரை இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் வேண்டுகோளுக்கு இணங்க காஸாவிற்குள் வரையறுக்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று புதன்கிழமை தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...