டயானா கமகே மீது பாராளுமன்றத்தில் தாக்குதல்?

Date:

நாடாளுமன்ற வளாகத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் கீழ் தளத்தில் உள்ள நூலகத்திற்கு அருகில் இந்த மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு எதிர்கட்சி உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தனது கையடக்கத் தொலைபேசியில் இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக அரச அமைச்சரும் அந்த உறுப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக நாடாளுமன்றம் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தமையினால் விசாரணைகளை மேற்கொள்ள பாராளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...