மூன்று முன்னாள் படைத் தளபதிகளுக்கு இராஜதந்திர பதவிகள்

Date:

மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க பாராளுமன்ற உயர் பதவிகள் குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான புதிய உயர்ஸ்தானிகராக அட்மிரல் (ஓய்வு) ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்னவும், கியூபாவுக்கான புதிய தூதுவராக அட்மிரல் (ஓய்வு) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்னவும், எயார் மார்ஷல் (ஓய்வு) சுதர்சன் கரகொட பத்திரன நேபாளத்துக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அறிவித்துள்ளது.

பல நாடுகளுக்கான இராஜதந்திரிகளை அரசாங்கம் மாற்றிவரும் பின்புலத்தில் இந்த மூன்று நியமனங்களும் வழங்கப்பட உள்ளது.

இதேவேளை, விரைவில் இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவரும் நியமிக்கப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...