ஜனாதிபதி செய்தது தவறு – மொட்டு கட்சி அதிருப்தி

Date:

கெஹலிய ரம்புக்வெல்ல மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவை அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

“கெஹலிய அமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அது எல்லாம் பொய் என்று மாறியது. ஆனால் இந்த விடயத்தில் சில மாற்றங்களைச் செய்வது நல்லது என ஜனாதிபதி தீர்மானித்திருக்கலாம். அதன்படி, மருத்துவராக இருக்கும் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இருப்பினும், எங்களுக்கு சில கவலைகள் உள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினோம். ஏனெனில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு வழங்குகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 5 பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி நீக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான். அது தவறு என்று அறிவிக்கிறோம். ஜனாதிபதி அவ்வாறு செய்திருக்கக் கூடாது. இதற்கு கட்சியாக நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்றார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...