Thursday, October 24, 2024

Latest Posts

செப்டெம்பரில் 168 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவு. அதில் 22 பேர் கர்ப்பம்!!  

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான 168 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர்களில் 22 பேர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 11,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக எம்.பி சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் குறைந்தது 41% பாலியல் துஷ்பிரயோகத்தின் கீழ் வருவதாக கூறினார்.

இந்த ஆண்டு செப்டெம்பரில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, அது ஒரு அதிகரிப்பை காட்டுகிறது என்று எம்.பி மேலும் கூறினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.