ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் காலி முகத்திடல் சம்பவத்தின் பின்னரும் பாடம் கற்கவில்லை, அவர்கள் தமது கட்சி பற்றி மாத்திரமே பேசுகின்றனர் என SJB பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று மஹரகமவுக்கு கொண்டு செல்லப்பட்ட சீத்தா யானையை பார்வையிட சென்ற போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் நாட்டை பற்றியோ மக்களை பற்றியோ பேசுவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன தெரிவித்தார்.
அவர்கள் விரும்புவது கட்சியை உயர்த்துவதுதான். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் SLPP அவர்களின் உண்மையான முடிவுகளைப் பெறும் என்றார்.