அரச வன்முறைகளுக்கு எதிராக யாழில் ஆசிரியர்கள் போராட்டம்

Date:

அதிபர், ஆசிரியர்கள் மீது அரசால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைக் கண்டித்தும், ஆசிரியர்களின் உரிமைகளை அடக்குமுறையால் பறிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகள் முன்பாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர், ஆசிரியர்களின் உரிமையை வலியுறுத்தி கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது அரசால் பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய பாடசாலைகள் முடிவடைந்த பின்னர் யாழிலுள்ள பாடசாலைகள் முன்பாக அதிபர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, “ரணில் – ராஜபக்‌ஷ அரசால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைக் கண்டிக்கின்றோம்”, “ஆசிரியர் உரிமைகளை அடக்குமுறையால் பறிக்காதே”, “வாக்குறுதி கொடுத்த சம்பள உயர்வை வழங்கு”, “மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்காதே” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...