அநுர அரசுடன் பேசிநிரந்தரமான தீர்வைபெற்றுத் தருவோம்- தமிழ் மக்களின் ஆணையைக் கோருகின்றார் மனோ

Date:

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம். அதற்கான ஆணையைத் தமிழ் மக்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“தமிழ்த் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஆளுமையுள்ளவர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்களும் நிச்சயமாக நாடாளுமன்றம் செல்வோம். நாங்கள் அனைவரும் கரம் கோர்த்துக்கொண்டு சிநேகபூர்வமான முறையில் அநுர அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...