அநுர அரசுடன் பேசிநிரந்தரமான தீர்வைபெற்றுத் தருவோம்- தமிழ் மக்களின் ஆணையைக் கோருகின்றார் மனோ

Date:

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம். அதற்கான ஆணையைத் தமிழ் மக்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“தமிழ்த் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஆளுமையுள்ளவர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்களும் நிச்சயமாக நாடாளுமன்றம் செல்வோம். நாங்கள் அனைவரும் கரம் கோர்த்துக்கொண்டு சிநேகபூர்வமான முறையில் அநுர அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...