சிறுவனை பாலியல் வல்லுறவு செய்த பிக்குகள் இருவர் கைது

Date:

நவுன்தூடுவ யட்டதோல பிரதேசத்தில் 13 வயதுடைய ஆண் குழந்தையொருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவி உடை அணிந்த இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய கட்டளைத் தளபதி ஹேமமாலியால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரா பத்மலால் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம உடவத்த தலைமையில் சிறுவர் மற்றும் மகளிர் பணியக நிலைய பொறுப்பதிகாரி ஹேமமாலி தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...