கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Date:

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த மாதம் 15ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. இதன் தொடர்பணிகள் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி மீள ஆரம்பமாகுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதன் ஒருபகுதியாக ஒன்பது நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் 17 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளைமுன்னெடுத்த பேராசிரியர் ராஜ் சோமரட்ணவுக்கு நேரமின்மையால் தற்காலிகமாக அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

அந்நிலையில் பணியானது நாளை 30ஆம் திகதி நீதிமன்றில் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டு அகழ்வுப் பணியானது எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில் இன்று...

குருக்கள்மடம் முஸ்லிம்களுக்கு நீதி

குருக்கள்மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக்...

பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

பாதாள உலகக் கும்பல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின்...

மனோ எம்பிக்கு முக்கிய அமைச்சர் வழங்கிய உறுதி

“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள்...