டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி சமூக செயற்பாட்டாளர் ஓசல தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த மனு நிராகரிக்கப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
டயானா கமகே பிரித்தானிய பிரஜை எனவும், நாட்டின் அரசியலமைப்பின் கீழ் பாராளுமன்றத்தில் தெரிவு செய்ய, அமரவும், வாக்களிக்கவும் தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சமூக ஆர்வலர் ஓசல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.