யாழ். குடாநாட்டில் 3 தினங்களாக விடாது பெய்யும் தொடர் மழை

Date:

யாழ்.குடாநாட்டில் 3 நாட்களாக தொடரும் பருவ மழை காரணமாக நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.

கடந்த 72 மணி நேரத்தில் சுமார் 165 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகிய நிலையில் இதுவரை 16 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பல நூறு குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

இதில் தாழ்வான பிரதேசங்கள் மற்றும் குடிசை வீடுகள், வீட்டுத் திருத்த வேலைகளில் அகப்பட்ட குடும்பங்களே அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக ஏற்படுவதன் காரணமாக குளிருடன் கூடிய காலநிலையும் காணப்படுவதனால் சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் அதிக பாதிப்பினை எதிர்கொள்கின்றனர்.

மழை காலத்தில் வீட்டில் சமைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறான காலத்தில் உடனடி பசிக்கு உணவளிக்கும் பாணின் விலை நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் 250 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதனால் அதனைப் பெறுவதிலும் பெரும் நெருக்கடி காணப்படுகின்றது.

  • Dayalan – vk

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, மோட்டார் சைக்கிளில் வந்த...

முட்டை விலை குறைப்பு

பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டையின் விலையை...

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த மாதம் 14...