யானை தாக்கி பெண் பலியானதால் பிரதேசவாசிகள் தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

Date:

அநுராதபுரம் கெப்பத்திகொல்லேவ பகுதியில் பொலீஸ் அதிகாரி ஒருவரை கிராம மக்கள் பொல்லால் அடித்துக் கொன்றனர்.

நேற்று பிற்பகல், கபிதிகொல்லேவ, ரம்பகேபூவெவ பகுதியில் வைத்து தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய இவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் காட்டு யானை தாக்கியதில் உள்ளூர் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், பிரதேசவாசிகள் வீதியைக் மறித்து செய்த போராட்டத்தை கட்டுப்படுத்தச் சென்ற போது, ​​பொலிஸ் பரிசோதகர் மற்றும் மேலும் இரு உத்தியோகத்தர்கள் மீது பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரியை காப்பாற்ற வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிக்கு உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....