யாழில். ‘பிக் மீ’ முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல்!

Date:

யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக கிடைக்கப்பெற்ற வாடிக்கையாளரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகேயே நேற்று இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது” யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் நின்று ஒருவர் “பிக் மீ ” செயலி ஊடாக முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்தியுள்ளார் எனவும், இதனை அடுத்து அவரை ஏற்றுவதற்காக வந்த முச்சக்கர வண்டி சாரதியிடம் தரிப்பிடத்தில் நிற்கும் சாரதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த பிக்மீ சாரதி மீது ஏனைய சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் “பிக் மீ” சேவை அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து ஏனைய முச்சக்கர வண்டி சாரதிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...