இன்று ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பு வருவோர் தேசத் துரோகிகள்

Date:

கொழும்பில் இன்று (02) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தேசத் துரோகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

“பொதுமக்களை மீண்டும் கொழும்புக்கு வருமாறு சில குழுக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேசத் துரோகிகள். அவர்களை துரோகிகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், சுற்றுலா பயணிகள் வர முயற்சி செய்கின்றனர். கடந்த 28ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எமது ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் கலாநிதி சமரதுங்க தலைமையில் நடைபெற்றது. நல்ல பலன்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் தருணம். மூன்றாம் நாள் மீண்டும் அது பற்றிய சிறப்பு விவாதம் நடைபெறும்.

இதற்காக சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உடன்படிக்கையுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அப்போது இதுபோன்ற சூழலை உருவாக்கி இப்பிரச்னைக்கு முடிவு கட்ட, வழி அமைக்கும் போது, ​​குறைந்தபட்சம் ஓராண்டு கால அவகாசத்தை பொதுமக்கள் வழங்க வேண்டும்.”

நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...

இலங்கை கிரிகெட்டுக்கு யார் அடுத்த தலைவர்?

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட்...

மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும். இலங்கை தொழிலாளர்...

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...