இறக்குமதி பொருட்கள் குறித்து அதிவிசேட வர்த்தமானி

0
43

இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சுவிங்கம் உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள், சொக்லேட், பிஸ்கட், கேக் மற்றும் வாசனை சவர்க்காரங்கள் ஆகிய இதில் உள்ளடங்கும்.

இந்த பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது இறக்குமதியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலை, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரி ஆகியவற்றை ஆங்கிலத்தில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று (01) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here