வாகன இறக்குமதி மோசடி! விரைவில் கைது செய்யப்பட உள்ள பிரபல அரசியல் புள்ளி!!

Date:

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்து வாகனங்களை விற்பனை செய்ய தயாராகி வந்த மத்திய மாகாணத்தின் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாரஹேன்பிட்டியில் உள்ள உயர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு ஜீப் வண்டியொன்றை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று (01) கண்டுபிடித்துள்ளனர்.

வாகனத்தை விற்பனை செய்ய தயாராக இருந்த பிரதான வாகன விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது குறித்த ஜீப் சம்பந்தப்பட்ட பலமான அரசியல்வாதியினால் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

2008ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை அரசியல்வாதியின் பெயரில் பொய்யான தகவல்களுடன் பதிவுசெய்யப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தில் வாகனக் காட்சியறை உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் புலனாய்வு அதிகாரிகள் களமிறக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...