ஜனாதிபதி ரணிலின் விடாபிடி முடிவால் பின்வாங்கியது மொட்டுக் கட்சி!

Date:

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் கீழ் கடந்த அமைச்சரவை தற்காலிக அடிப்படையில் சிறிய மாற்றங்களுடன் மீண்டும் நியமிக்கப்பட்டது.

நிரந்தர அமைச்சரவையை நியமிப்பதற்கு பல தடவைகள் திகதிகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

குறிப்பாக மொட்டுவினால் வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியிடம் பல தடவைகள் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இதன்படி ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு மொட்டு தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காலநிலை மாற்றம் தொடர்பான உலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்துக்கு செல்லவுள்ளதாகவும், விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....