திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு!

Date:

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு நேற்று (02) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிதாக விவசாய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொண்ட விவசாயிகளுக்கான பற்றுச்சீட்டும் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 736 விவசாயிகளுக்கான 22.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 47 விவசாயிகளுக்கான காசோலை இன்று வழங்கப்பட்டதுடன் மீதமாகவுள்ள விவசாயிகளின் நட்ட ஈட்டு கொடுப்பனவு அவர்களின் வங்கி கணக்கின் வரவில் வைப்பில் இடப்பட்டுள்ளது என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை உதவி பணிப்பாளர் கே.எல்.அன்சார் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் உத்தியோகத்தர்கள் , விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....