வற் வரி குறைப்பு: அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது

Date:

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் (VAT) வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜயந்த (Anil Jayantha) தெரிவித்துள்ளார்.

கம்பஹா – மிரிஸ்வத்தையில் நேற்றையதினம் (07) இடம்பெற்ற தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியித்தின் உடனான பேச்சுவார்த்தையின் போதும், வற் வரி விலக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாடசாலை உபகரணங்களின்மீதான வற் வரியை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாகக் குறைத்தல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்களை வாங்குவதற்கு பண கொடுப்பனவை வழங்குதல் ஆகிய இரண்டு முன்மொழிவுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வற் வரி குறைப்பு: வெளியானது அரசாங்கத்தின் நிலைப்பாடு | Vat Reduction In Sri Lanka New Govt

இதன் படி, கவனமாக ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு முதல் வாய்ப்பிலேயே வற் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அனில் ஜயந்த வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....