வற் வரி குறைப்பு: அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது

Date:

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் (VAT) வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜயந்த (Anil Jayantha) தெரிவித்துள்ளார்.

கம்பஹா – மிரிஸ்வத்தையில் நேற்றையதினம் (07) இடம்பெற்ற தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியித்தின் உடனான பேச்சுவார்த்தையின் போதும், வற் வரி விலக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாடசாலை உபகரணங்களின்மீதான வற் வரியை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாகக் குறைத்தல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்களை வாங்குவதற்கு பண கொடுப்பனவை வழங்குதல் ஆகிய இரண்டு முன்மொழிவுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வற் வரி குறைப்பு: வெளியானது அரசாங்கத்தின் நிலைப்பாடு | Vat Reduction In Sri Lanka New Govt

இதன் படி, கவனமாக ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு முதல் வாய்ப்பிலேயே வற் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அனில் ஜயந்த வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...