யாழ். இந்திய துணை தூதரகம் மீது போத்தல் வீசி தாக்குதல் நடத்திய மூவர் கைது

0
128

யாழில் உள்ள இந்தியத் துணை தூதரகம் மீது காரில் வந்த இளைஞர்கள் போத்தல் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது காரில் வந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து சீ.சீ.ரி கமரா உதவியுடன் தாக்குதல் மேற்கொண்ட கார் இனங்காணப்பட்டு அதில் பயணித்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here