இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 11 பேருக்கு2 வருடங்கள் சிறைத்தண்டனை

Date:

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 11 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய வேளை கடந்த ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 இந்திய மீனவர்களில் 11 பேருக்கே 2 வருடங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டபோதும் 10 மீனவர்கள் இரண்டாவது தடவையும் எல்லை தாண்டிய குற்றத்துக்காகவும், படகு உரிமையாளர் ஒருவருமாகவே 11 பேருக்கும் 2 வருடங்கள் சிறைத்தண்டணை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய நால்வரும் 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டணையுடன் விடுவிக்கப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...