Friday, May 17, 2024

Latest Posts

ஏழை மக்களுக்கு வரவு செலவு திட்டத்தில் நிவாரணம்

இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் மிகவும் கடினமான பொருளாதார அடித்தளத்தில் இருந்து முன்வைக்கப்பட வேண்டும், ஆனால் வாழ்வாதார மட்டத்திற்கு கீழே உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

“இந்த வருடத்தின் சிறப்பு என்னவெனில், இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களில் மிகவும் கடினமான பொருளாதார அடிப்படையில் அமர்ந்து அடுத்த வருடத்திற்கான வருமான-செலவு கணிப்புகளை முன்வைக்க வேண்டும். மேலும் மிகவும் கஷ்டப்பட்டு வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது எங்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாழ்வாதாரத்திற்கு கீழே உள்ளனர். அவர்களை பரிசீலித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அத்துடன், இலங்கை பொருளாதார ரீதியில் உயர்வதற்குத் தேவையான அடிப்படை அடித்தளத்தை மீண்டும் ஒருமுறை நிறுவுவதும் இந்த நேரத்தில் எமக்கு முக்கியமானது.

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.